கொரோனா இன்னும் குணமாகவில்லை; சோனியாகாந்தி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்க கோரிக்கை


கொரோனா இன்னும் குணமாகவில்லை; சோனியாகாந்தி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்க கோரிக்கை
x

கொரோனாவில் இருந்து இன்னும் குணமாகாததால் அமலாக்கத்துறை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆஜராக கூடுதல் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுடெல்லி:

நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று (புதன்கிழமை) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை கடந்த 1-ந் தேதி சம்மன் அனுப்பி இருந்தது.

ஆனால், மறுநாளே (2-ந் தேதி) சோனியாகாந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் குணமடைந்தால், அமலாக்கத்துறை முன்பு திட்டமிட்டபடி ஆஜராவார் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், அவர் இன்னும் கொரோனாவில் இருந்து குணமடையவில்லை என்று சமீபத்திய சோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக நேற்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே, அவர் இன்று விசாரணைக்கு ஆஜராக மாட்டார். அவர் அமலாக்கத்துறையிடம் கூடுதல் கால அவகாசம் கேட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story