அசாமில் கனமழைக்கு இரண்டாக பிளந்த சாலை: போக்குவரத்து தடையால் பொதுமக்கள் அவதி


அசாமில் கனமழைக்கு இரண்டாக பிளந்த சாலை: போக்குவரத்து தடையால் பொதுமக்கள் அவதி
x

அசாமில் மழை வெள்ளம் காரணமாக அங்குள்ள கரீம்கஞ்ச் பைபாஸ் சாலையில் உடைப்பு ஏற்பட்டது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்படுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், மழை வெள்ளம் காரணமாக அங்குள்ள கரீம்கஞ்ச் பைபாஸ் சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அனைத்து வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. சேதம் சரி செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story