ஓடும் காரில் பெண், 6 வயது மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்


ஓடும் காரில் பெண், 6 வயது மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
x

ஓடும் காரில் பெண் மற்றும் அவரின் 6 வயது மகளும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் பிரையன் கலியர் பகுதியை சேர்ந்த பெண் நேற்று இரவு தனது 6 வயது மகளுடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

ரோர்கீ என்ற பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சோனு என்ற நபர் தனது காரில் லிப்ட் கொடுப்பதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதைநம்பிய அந்த பெண் தனது மகளுடன் அந்த காரில் ஏறியுள்ளார். காரில் ஏற்கனவே சோனிவின் நண்பர்கள் இருந்துள்ளனர்.

அப்போது, ஓடும் காரில் அந்த பெண்ணையும் அவரின் 6 வயது மகளையும் காரில் இருந்தவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் ஓடும் காரில் இருந்து அந்த பெண்ணையும், அவரது மகளையும் ஆற்றங்கரை அருகே தள்ளிவிட்டுள்ளனர்.

இதையடுத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பாதிக்கப்பட்ட அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணையும் அவரின் 6 வயது சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story