அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு


அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு
x

Image Courtesy : PTI 

தினத்தந்தி 24 Jun 2022 4:21 AM GMT (Updated: 24 Jun 2022 5:46 AM GMT)

அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது

கவுகாத்தி,

அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.மழை-வெள்ளம் ஒருபுறம் இருக்க பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில் வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதால், அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது .மேலும் 30 மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 30 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் அமைக்கப்பட்டுள்ள 759 நிவாரண முகாம்களில் மொத்தம் 2.84 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


Next Story