புலிகளுக்கு நடுவில் தைரியமுடன் உலவிய நாய்... வைரலாகும் வீடியோ


புலிகளுக்கு நடுவில் தைரியமுடன் உலவிய நாய்... வைரலாகும் வீடியோ
x

புலிகளின் கூட்டத்திற்கு நடுவில் நாய் ஒன்று தைரியமுடன் உலவிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.



புதுடெல்லி,



வன விலங்குகளில் ஒன்றான புலிகளின் கூட்டத்திற்கு நடுவில் கோல்டன் ரிட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்று தைரியமுடன் உலவிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவிற்கு கீழே, பல புலி குட்டிகளை வளர்த்தெடுப்பது என்பது நாய்க்கு எளிய வேலை அல்ல என பதிவிடப்பட்டு உள்ளது. இதன்படி, புலிகள் பிறந்த குட்டியாக இருந்தபோது, அதற்கு அந்த ரிட்ரீவர் நாயானது பால் கொடுத்து வளர்த்து உள்ளது.

அதனால், அந்த நாய்தான் தங்களுடைய தாய் என புலிகள் நினைத்ததற்கு காரணம். அதனால், புலிகளின் கூட்டத்தில் நாய் எளிதில் உலவியபடி, அச்சமின்றியும் இருந்துள்ளது. பாசப்பிணைப்பில் புலிகள் கட்டுண்டு கிடக்கின்றன.

டைகர் பிக்ஃபேன் என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோவானது, வெளியிடப்பட்டு உள்ளது. இதனை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர்.

அந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக்கும் செய்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் வீடியோவை பார்த்து ஒரு புறம் ஆச்சரியப்பட்டதுடன், அதிர்ச்சியும் அடைந்தனர். ஆனால், அதில் உள்ள உண்மையை ஒரு சிலர் புரிந்து கொண்டுள்ளனர்.


Next Story