நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவடைந்தது


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவடைந்தது
x

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இரவு 9 மணியோடு நிறைவடைந்தது.

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு வரும் ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 7-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே ராணுவ மருத்துவ நிறுவனங்களில் நடத்தப்படும் பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கும், நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20(இன்று) வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு 9 மணியோடு நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.


Next Story