எடியூரப்பா நாளை மந்திராலயம் பயணம்


எடியூரப்பா நாளை மந்திராலயம் பயணம்
x

எடியூரப்பா நாளை மந்திராலயம் பயணம் மேற்கொள்கிறார்.

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நாளை(புதன்கிழமை) ஆந்திராவில் உள்ள மந்திராலயத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நாளை மதியம் 1.30 மணிக்கு கார் மூலம் சிக்பள்ளாப்பூர், அனந்தபூர் வழியாக மந்தராலயத்திற்கு செல்கிறார்.

நாளை இரவு அங்கு தங்கும் அவர் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை ராகவேந்திரா சுவாமியை நேரில் சந்தித்து ஆசி பெறுகிறார். அந்த மடத்தில் அவர் சிறப்பு பூஜைகளை செய்கிறார்.இதை முடித்து கொண்டு எடியூரப்பா காலை 11 மணிக்கு கார் மூலம் மீண்டும் அனந்தபூர், சிக்பள்ளாப்பூர் வழியாக பெங்களூரு வந்து சேருகிறார். எடியூரப்பா முன்னாள் முதல்-மந்திரி என்பதால் அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி ஆந்திரா மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story