திருட்டு வழக்கில் 2 பேர் சிக்கினர் ரூ.30¼ லட்சம் பொருட்கள் பறிமுதல்


திருட்டு வழக்கில் 2 பேர் சிக்கினர்  ரூ.30¼ லட்சம் பொருட்கள் பறிமுதல்
x

மைசூருவில் திருட்டு வழக்கில் கைதான 2 பேரிடம் இருந்து ரூ.30¼ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மைசூரு:

மைசூரு சிவராம்பேட்டை லட்சுமி விலாஸ் ரோட்டில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில், கடந்த மாதம்(ஜூலை) 19-ந்தேதி வாடிக்கையாளர் ஒருவர் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார்.

அப்போது அந்த அறைக்குள் புகுந்த மர்மநபர்கள், அவரின் நகை-பணத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தேவராஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 621 கிராம் தங்கநகைகள், 350 கிராம் வெள்ளிப்பொருட்கள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் கார், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.30¼ லட்சம் இருக்கும். கைதான 2 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.


Next Story