.மகளை கற்பழித்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை: மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு


.மகளை கற்பழித்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை:  மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு
x

மகளை கற்பழித்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூரு:

மைனர் பெண் கற்பழிப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் விட்டலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ்(வயது 68). இவர் தனது மகளான மைனர் பெண்ணை கொடூரமாக கற்பழித்தார். இந்த கொடுமையை தொடர்ந்து அவர் செய்து வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மைனர் பெண், நடந்த விவரங்களை தனது குடும்பத்தினரிடம் கூறினார். அவர்கள் இதுபற்றி பண்ட்வால் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்துல் அஜீசை கைது செய்தனர். பின்னர் அவர் மீது மங்களூரு கூடுதல் மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது.

20 ஆண்டு சிறை

வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ராதாகிருஷ்ணா தீர்ப்பளித்தார். அவர், வழக்கில் குற்றவாளியான அப்துல் அஜீசுக்கு 20 ஆண்டுகள் கடுங்கள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அப்துல் அஜீசை கைது செய்து மங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story