ராமநகர் அருகே பாலிஷ் போடுவதாக கூறி: பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ் செய்த 2 பேர் கைது


ராமநகர் அருகே பாலிஷ் போடுவதாக கூறி:  பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ் செய்த 2 பேர் கைது
x

ராம்நகர் அருகே பாலிஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

ராமநகர் மாவட்டம் புறநகர் கே.ஜி.ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவரது வீட்டுக்கு தங்க நகைகள் பாலிஷ் செய்து தருவதாக கூறி 2 நபர்கள் வந்தனர். அவா்களிடம் தான் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றி பாலிஷ் போடுவதற்காக சுதா கொடுத்தாா். அதனை பாலிஷ் செய்துவிட்டு, தங்க சங்கிலியை கொடுத்துவிட்டு 2 பேரும் சென்றார்கள். அப்போது தான் கொடுத்த தங்க சங்கிலிக்கு பதிலாக வேறு தங்க சங்கிலியை கொடுத்தது சுதாவுக்கு தெரிந்தது. அதாவது சுதா கொடுத்த தங்க சங்கிலி 50 கிராம் எடை கொண்டதாகும். ஆனால் மர்மநபர்கள் கொடுத்த 30 கிராம் தான் இருந்தது. இதுபற்றி கிராம மக்களிடம் சுதா தெரிவித்தார்.

மர்மநபர்கள் பாலிஷ் செய்வது போல நடித்து தங்க சங்கிலியை அபேஸ் செய்த விவகாரம் கிராமத்தில் வேகமாக பரவியது. அப்போது பக்கத்து கிராமத்தில் 2 மர்மநபர்களும் இருப்பது தெரிந்ததும், உடனே அங்கு சென்ற மக்கள், 2 பேரையும் மடக்கி பிடித்து தர்ம-அடி கொடுத்தனர். பின்னர் ராமநகர் புறநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், 2 பேரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. அவா்களிடம் இருந்து சுதாவிடம் அபேஸ் செய்த தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story