பிரதமர் மோடி தொடங்கி வைத்தது பா.ஜனதா அரசின் திட்டங்கள் கிடையாது-குமாரசாமி சொல்கிறார்


பிரதமர் மோடி தொடங்கி வைத்தது  பா.ஜனதா அரசின் திட்டங்கள் கிடையாது-குமாரசாமி சொல்கிறார்
x

பிரதமர் மோடி தொடங்கி வைத்தவை பா.ஜனதா அரசின் திட்டங்கள் கிடையாது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி பெங்களூருவில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் சென்றுள்ளார். அவை பா.ஜனதா அரசின் திட்டங்கள் கிடையாது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட திட்டங்கள் ஆகும். ஆனால் இதை தங்கள் திட்டங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இவ்வாறு கூறுவது அவரது வழக்கம். நான் செயல்படுத்திய திட்டங்களுக்கு பா.ஜனதாவினர் விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள்.

கர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது பிரதமர் மோடி வரவில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் மோடி கர்நாடகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தினார். இப்போது சட்டசபை தேர்தல் நெருங்குவதால் மோடி கர்நாடகம் வந்து சென்றுள்ளார். பெங்களூருவில் இருந்து வரிகள் மூலம் மத்திய அரசுக்கு அதிகளவில் வருவாய் செல்கிறது. ஆனால் பெங்களூரு வளர்ச்சி விஷயத்தில் மத்திய அரசு புறக்கணிக்கிறது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story