பிறந்தநாள் குறித்து சித்தராமையா ருசிகர பதில்


பிறந்தநாள் குறித்து சித்தராமையா ருசிகர பதில்
x

பிறந்தநாள் குறித்து சித்தராமையா ருசிகர பதில் கூறியுள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி 75-வது பிறந்தநாள் ஆகும். அவரது 75-வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடுவது குறித்து ஆதரவாளர்கள், முன்னாள் மந்திரிகள் ஆலோசித்து வருகின்றனர். சித்தராமையா உற்சவம் என்ற பெயரில் அடுத்த மாதம் 3-ந்தேதி பிறந்தநாளை கொண்டாட சித்தராமையாவின் ஆதரவாளர்கள் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நிருபர்கள் சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் கூறியதாவது:- எனது 75-வது பிறந்தநாளை நான் கொண்டாட மாட்டேன். அடுத்த மாதம் 3-ந் தேதி எனது பிறந்தநாள் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த தேதியில் நான் பிறக்கவில்லை. எனது பிறந்தநாள் எப்போது என்று எனக்கே தெரியாது. நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து இதுவரை பிறந்தநாள் கொண்டாடியது இல்லை. எனது ஆதரவாளர்கள், நலவிரும்பிகள் எனது 75-வது பிறந்தநாளை கொண்டாட ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு நான் தடை விதிக்க முடியுமா?.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story