கஞ்சா கடத்தல் வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
லாத்தூர்,
கர்நாடகாவின் பீதர் மாவட்டத்தில் உள்ள அவுரத் பர்சாலி தாலுகாவில் மாலேகாவ் தாண்டாவில் வசிக்கும் ராகுல் நீலகாந்த் பவார், ஷிரிஷ் ரகுநாத் ஜாதவ், சோம்நாத் சிவாஜி ஜாதவ் ஆகியோர் 176 கிலோ கஞ்சாவை கடந்திய வழக்கில் 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். லத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கிர் கோர்ட்டில் இவர்கள் மீதான வழக்கு நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவில், 3 பேர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story






