12-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தானே,
தானே காப்பூர்பாவடி மனோரமா நகர் பகுதியை சேர்ந்தவர் பூஜா திவாரி (வயது17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் வேலை விசயமாக வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த பூஜா திவாரி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பூஜா திவாரி உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காப்பூர்பாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவி சரியாக தேர்வுக்கு படிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
Next Story