17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை


17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
x

செல்போனை பிடுங்கி கால்வாயில் வீசியதால் 17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பை மலாடு மால்வாணி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபருடன் நண்பராக பழகி வந்தாள்.

இது சிறுமியின் பெற்றோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அந்த வாலிபருக்கு பழக கூடாது என சிறுமியை கண்டித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி செல்போனில் பேசி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த மூத்த சகோதரி வாலிபருடன் தான் பேசி கொண்டிருப்பதாக கருதினார்.

இதனால் கோபம் அடைந்த அவர் சிறுமி வைத்திருந்த செல்போனை பிடுங்கி அங்குள்ள கால்வாயில் வீசி எறிந்தாள்.

இதனால் சிறுமி மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் மால்வாணி கட்டுமான பணி நடைபெறும் கட்டிடத்திற்கு சென்ற சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story