3 வயது சிறுமி கற்பழித்து கொலை


3 வயது சிறுமி கற்பழித்து கொலை
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:45 PM GMT)

தானே,

தானே மாவட்டம் பிவண்டி பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அந்த சிறுமி திடீரென காணாமல் போய் விட்டாள். இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்காமல் போனதால் சாந்திநகர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இதற்கிடையில் அங்கு இடிக்கப்பட்ட கட்டிட வளாகத்தின் உள்ளே சிறுமி பிணமாக கிடந்தாள். சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்து உடல் வீசப்பட்டது தெரியவந்தது. இதனால் போலீசார் கடத்தல், கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இந்த கொடூர செயலை செய்த ஆசாமி யார் எனவும், அவரை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story