சகன் புஜ்பால் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு


சகன் புஜ்பால் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:46 PM GMT)

வீடியோ அனுப்பியவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் மந்திரி சகன் புஜ்பால் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மும்பை,

வீடியோ அனுப்பியவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் மந்திரி சகன் புஜ்பால் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

வீடியோ அனுப்பியவருக்கு மிரட்டல்

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சகன் புஜ்பால். இவர் மகாவிகாஸ் அகாடி ஆட்சியில் மந்திரியாக இருந்தார். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இந்து கடவுகளுக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. இதில் இந்து கடவுளுக்கு எதிராக பேசியதாக கூறப்படும் வீடியோவை செம்பூரை சேர்ந்த ஒருவர் சகன் புஜ்பாலுக்கு அனுப்பி உள்ளார்.

இந்தநிலையில் அவர் செம்பூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது:-

இந்து கடவுள் குறித்து சகன் புஜ்பால் அவதூறாக பேசிய 2 வீடியோவை அவருக்கு அனுப்பினேன். இந்தநிலையில் சகன் புஜ்பால் உள்ளிட்ட 3 பேர் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

வழக்குப்பதிவு

இந்த புகாரை அடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் மந்திரி சகன் புஜ்பால் மற்றும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்கை மும்பை யுனிட்-6 போலீசார் விசாரிப்பார்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.


Next Story