நீச்சல் குளத்தில் முதியவர் பலி: கல்லூரி மாணவர் கைது


நீச்சல் குளத்தில் முதியவர் பலி: கல்லூரி மாணவர் கைது
x

மும்பை,

மும்பை கோரேகாவ் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு சாமந்த் (வயது75). இவர் கடந்த 23-ந் தேதி மாலை கோரேகாவ் மேற்கு பகுதியில் உள்ள ஓசோன் நீச்சல் குளத்துக்கு பேரனுடன் சென்றார். முதியவர் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது நீச்சல் குளத்தின் மேல் பகுதியில் இருந்து 20 வயது கல்லூரி மாணவர் ஒருவர் முதியவர் மீது தவறுதலாக குதித்தார். இதில் முதியவரின் தலை, கழுத்தில் காயம் ஏற்பட்டது. நீச்சல் குளம் ஊழியர்கள் முதியவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதியவர் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கல்லூரி மாணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மாணவருக்கு தேர்வு நடந்ததால் போலீசார் அவரை கைது செய்யாமல் இருந்தனர். இந்தநிலையில் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.

1 More update

Next Story