டாக்சி சேவைகளுக்கு விதிகளை உருவாக்க குழு அமைப்பு

மும்பை,
மராட்டியத்தில் இணைய செயலி மூலமாக இயங்கும் டாக்சி சேவைகளுக்கான விதிகளை வகுக்க 6 பேர் கொண்ட குழுவை மராட்டிய அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து மாநில உள்துறை வெளியிட்ட அரசாணையில், "இந்த குழுவை அமைப்பதற்கான முடிவு பரிசீலனையில் இருந்தது. தற்போது மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல் விதிமுறை 2020-ஐ அமல்படுத்துமாறு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மத்திய அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் மாநில அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது" என்றார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதிர் குமார் ஸ்ரீவஸ்தவா குழுவின் தலைவராக இருப்பார். அடுத்த 3 மாதங்களுக்கு அவர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





