கிளி சத்தம் போட்டதால் உரிமையாளர்கள் மீது புகார்


கிளி சத்தம் போட்டதால் உரிமையாளர்கள் மீது புகார்
x

கிளி சத்தம் போட்டதால் அதன் உரிமையாளர் மீது புனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புனே,

புனே காட்கி போலீஸ் நிலையத்தில் கடந்த 5-ந்தேதி சுரேஷ் ஷிண்டே(வயது72) என்ற முதியவர் வினோத புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், சிவாஜி நகர் பகுதியை சேர்ந்த அவர் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த அக்பர் கான் என்பவர் வளர்த்து வரும் கிளி ஒன்று அதிக சத்தம் போடுவதாகவும், இதன் காரணமாக தனக்கு இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவித்து இருந்தார். இதன்பேரில் போலீசார் கிளியை வளர்த்து வரும் அக்பர்கான் மீது பெட்டி வழக்கு பதிவு செய்தனர்.

மூத்த குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை கடைபிடிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story