ஏக்நாத் ஷிண்டே பிரபலமான முதல்-மந்திரி- கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேச்சு
ஏக்நாத் ஷிண்டே பிரபலமான முதல்-மந்திரி என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசினார்.
மும்பை,
ஏக்நாத் ஷிண்டே பிரபலமான முதல்-மந்திரி என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசினார்.
மக்களை ஈர்க்கிறார்
பாரத்ஜெயின் மகாமண்டல் சார்பில் நடந்த உலக நண்பர்கள் தின விழாவில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசுகையில், "ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆகி சில நாட்கள் தான் ஆகி உள்ளன. ஆனால் ஒவ்வொருவரிலும் அவர் தனது முத்திரையை வைத்தது போல தெரிகிறது. அவர் பிரபலமான முதல்-மந்திரி. எல்லாவற்றையும் விட அவர் மக்களை ஈர்க்கிறார். மேகங்கள் விலகி செல்கின்றன" என்றார்.
மன்னிப்பது சாதாரண விஷயம் அல்ல
விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், "மன்னிப்பு நட்புடன் சேரும் போது எல்லா பிரச்சினைகளும் தீரும். ஒருவரை மன்னிப்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு பெரிய மனது வேண்டும். எதை செய்தாலும் கடினமாக உழைக்க வேண்டும். அதேநேரம் அதிர்ஷடம் இல்லாமல் எதுவும் நடக்காது. ஆனால் கடினமாக உழைப்பது தான் நமது கையில் உள்ளது.
கடினமாக உழைக்காவிட்டால், நாம் எல்லாவற்றுக்கும் விதியை நம்பி இருக்க வேண்டும். மேலும் நாம் கடினமாக உழைக்காவிட்டால் எதுவும் நடக்காது. வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டு இருந்தால் எதுவும் உங்களுக்கு கிடைக்காது" என்றார்.