துறைமுக வழித்தடத்தில் நாளை மின்சார ரெயில் சேவை ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக துறைமுக வழித்தடத்தில் நாளை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
பராமரிப்பு பணிகள் காரணமாக துறைமுக வழித்தடத்தில் நாளை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி
மத்திய ரெயில்வேயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.05 மணி முதல் பிற்பகல் 3.55 மணி வரை மாட்டுங்கா - முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 10.25 மணி முதல் பிற்பகல் 3.46 மணி வரை விரைவு ரெயில்கள் அனைத்தும் மாட்டுங்கா - முல்லுண்டு இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.
சேவை ரத்து
துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - சுன்னாப்பட்டி, சி.எஸ்.எம்.டி. - பாந்திரா இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.40 மணிவரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 11.16 மணி முதல் மாலை 4.47 மணி வரை சி.எஸ்.எம்.டி., வடலாவில் இருந்து வாஷி, பேலாப்பூர், பன்வெலுக்கும், காலை 9.53 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை பன்வெல், பேலாப்பூர், வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. இந்த நேரத்தில் குர்லா - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
காலை 10.48 மணி முதல் மாலை 4.43 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, கோரேகாவுக்கும், காலை 10.45 மணி முதல் மாலை 5.13 மணி வரை கோரேகாவ், பாந்திராவில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில் சேவை இருக்காது.
இந்த தகவல்களை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.






