தாதா அருண் காவ்லி வீட்டில் தீ

மும்பை,
பிரபல தாதா அருண் காவ்லி பைகுல்லா தகிடி சால் பகுதியை சேர்ந்தவர். 1990-களில் தகிடி சாலில் அவர் தங்கியிருந்த 3 மாடி கட்டிடம் மிகவும் பிரபலமான இடமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தகிடி சாலில் அருண் காவ்லி தங்கி இருந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து 4 வாகனங்களில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் 3 மாடி கட்டிடத்தில் பிடித்த தீயை சுமார் 1 மணி நேரத்தில் அணைத்தனர்.
விபத்தின் போது கட்டிடத்தில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





