அருவி அருகே வனக்காவலர் உடல் மீட்பு


அருவி அருகே வனக்காவலர்  உடல் மீட்பு
x

அருவி அருகே வனக்காவலர் உடல் மீட்கப்பட்டது. 11 பேர் சேர்ந்து கொன்றதாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

தானே,

பிவண்டி தாலுகா பட்கா பகுதியில் வன காவலராக இருந்து வந்தவர் குந்தன் போயிர். இவர் சாகாப்பூர் பகுதியில் உள்ள மவுலி அருவி அருகே பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் தனது கணவர் உயிரிழந்த விவகாரம் பற்றி அறிந்த அவரது மனைவி சுப்ரியா போலீசில் புகார் அளித்தார். இதில் தனது கணவரை மர்ம நபர்கள் 11 பேர் சேர்ந்து அழைத்து சென்றதாகவும், அவர்கள் தான் கொலை செய்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவி்த்தனர். தற்போது விபத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



1 More update

Next Story