மேற்கு புறநகர் பகுதிகளில் பலத்த மழை- தாழ்வான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது


மேற்கு புறநகர் பகுதிகளில் பலத்த மழை- தாழ்வான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது
x

மும்பையில் மேற்கு புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்தது.

மும்பை,

மும்பையில் மேற்கு புறநகர் பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்தது.

பலத்த மழை

மும்பையில் கடந்த 3 வாரங்களாக மழை பெய்யவில்லை. இதன் காரணமாக நகரில் வெப்பநிலை அதிகரித்தது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகமாக இருந்தது. ஒருசில இடங்களில் லேசான மழை பெய்த போதும், மிகவும் புழுக்கம் நிலவியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இந்தநிலையில் இன்று காலை மும்பையில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக பாந்திரா முதல் போரிவிலி வரை மேற்கு புறகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவும் பெரும்பாலான இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

9.4 செ.மீ. மழை

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், " காலை மேற்கு புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்தது. தென் மும்பையின் கொலபா, கிழக்கு புறநகர் பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

புறநகர் பகுதிகளில் இன்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் 9.4 செ.மீ. மழை பெய்து உள்ளது" என்றார்.

1 More update

Next Story