கவுரவ மராத்திய பூஷன் விருது தொகை ரூ.25 லட்சமாக உயர்வு - மாநில அரசு முடிவு


கவுரவ மராத்திய பூஷன் விருது தொகை ரூ.25 லட்சமாக உயர்வு - மாநில அரசு முடிவு
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கவுரவ மராத்திய பூஷன் விருந்து தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

மும்பை,

கவுரவ மராத்திய பூஷன் விருந்து தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

விருந்துக்கான தகுதி

மராட்டிய பூஷண் விருது வழங்குவது தொடர்பான கூட்டம் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கலாசார விவகாரங்கள் துறை மந்திரி சுதிர் முங்கண்டிவார், கலாசார விவகாரங்கள்துறை முதன்மை செயலாளர் விகாஸ் கார்கே மற்றும் விருது குழு உறுப்பினர்கள், விஞ்ஞானி டாக்டர் அனில் ககோட்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விருதுக்கான தகுதி குறித்து கூட்டத்தில் விரிவான விவாதம் நடைபெற்றது. இந்த விருதுக்காக சுமார் 27 பெயர்கள் அரசுக்கு முன்மொழியப்பட்டன. அதுகுறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சிலர் விருதுக்கு புதிய பெயர்களையும் பரிந்துரைத்தனர்.

மராட்டியத்தில் பல முக்கிய பிரமுகர்கள் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இதுபோன்ற பல ஆளுமைகளை இந்த விருதுக்கு பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டது.

பரிசு தொகை

மேலும், விருது தொகையை கணிசமாக உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுவரை ரூ.10 லட்சம் விருதுக்கு பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. இந்த விருது தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த விருதை மேலும் ஈர்க்கக்கூடிய வகையில் உருவாக்க புதிய விதிகளை நிர்ணயம் செய்வது எனவும் முடிவுவெடுக்கப்பட்டது.

1 More update

Next Story