பொதுகழிவறையில் சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்:- வாலிபருக்கு ஆயுள் தண்டனை


பொதுகழிவறையில் சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்:- வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 2 July 2022 1:28 PM GMT (Updated: 2 July 2022 6:59 PM GMT)

பொதுகழிவறையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்க ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மும்பை,

மும்பையை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவள் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 5-ந்தேதி சாலை ஓரமாக மற்ற சிறுமிகளுடன் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது இயற்கை உபாதை கழிக்க சிறுமி அருகே இருந்த பொதுக்கழிவறைக்கு சென்றாள். இதன்பின் சிறுமி திரும்பி வந்த போது அங்கு கழிவறை பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்த 25 வயது வாலிபர் ஒருவர் வழிமறித்தார்.

பின்னர் சிறுமியை மிரட்டி கழிவறை உள்ளே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் ரூ.20-ஐ கொடுத்து யாரிடம் தெரிவிக்காமல் இருக்கும்படி மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தாள்.

இதன்படி பெற்றோர் சிவ்ரி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் விசாரணை நிறைவில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.


Next Story