மும்பையில் நீச்சல் குளத்தில் முதியவர் பலி


மும்பையில் நீச்சல் குளத்தில் முதியவர் பலி
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நீச்சல் குளத்தில் முதியவர் பலியானார்.

மும்பை,

மும்பை கோரேகாவ் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு சாமந்த் (வயது75). இவர் சம்பவத்தன்று மாலை கோரேகாவ் சித்தார்த் நகரில் உள்ள நீச்சல் குளத்துக்கு 14 வயது பேரனுடன் சென்றார். 2 பேரும் நீச்சல் குளத்தில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் நீச்சல் குளத்தில் டைவ் அடித்து விளையாடி கொண்டு இருந்தார். அவர் எதிர்பாராதவிதமாக முதியவர் மீது விழுந்தார்.

இதில் முதியவரின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக நீச்சல் குள ஊழியா்கள் முதியவரை கபாடியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து போலீசார் தெரியாமல் முதியவர் மீது குதித்த 20 வயது வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story