சிவசேனா சின்னத்தை ஷிண்டே அணிக்கு ஒதுக்க எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு


சிவசேனா சின்னத்தை ஷிண்டே அணிக்கு ஒதுக்க எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Sept 2022 6:16 PM IST (Updated: 7 Sept 2022 7:21 PM IST)
t-max-icont-min-icon

சிவசேனா சின்னத்தை ஷிண்டே அணிக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் உத்தவ் தாக்கரே மனு மீது 27-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

மும்பை,

சிவசேனா சின்னத்தை ஷிண்டே அணிக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் உத்தவ் தாக்கரே மனு மீது 27-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் குழப்பத்தில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, பா.ஜனதா ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி அணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க முடிவு விவகாரம், சபாநாயகர், கவர்னரின் அதிகாரங்கள் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஷிண்டே அணியினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

மேலும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், இதனால் கட்சியின் வில் அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஷிண்டே அணி தேர்தல் கமிஷனில் முறையிட்டதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது அவசரகதியில் முடிவு எடுக்க வேண்டாம் என்று தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

27-ந் தேதி விசாரணை

இந்த மனுக்கள் நேற்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷிண்டே தரப்பில் ஆஜரான வக்கீல், "மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் சின்னம் யாருக்கு சொந்தம் என்பது விரைந்து முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷனின் முடிவை கோர்ட்டு கட்டுப்படுத்தாது" என்றார்.

இதையடுத்து கட்சி சின்ன பிரச்சினையில் உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனு மீது வருகிற 27-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

1 More update

Next Story