ரூ.53 கோடி போதைப்பொருளுடன் பயணி கைது


ரூ.53 கோடி போதைப்பொருளுடன் பயணி கைது
x
தினத்தந்தி 9 March 2023 12:15 AM IST (Updated: 9 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை போட்டனர்.

இதில் சந்தேகத்தின் பேரில் ஒரு பயணியை வழிமறித்து உடைமைகளில் சோதனை நடத்தினர். இதில், அவர் மறைத்து வைத்திருந்த 7 கிலோ 600 கிராம் எடையுள்ள பார்சல் ஒன்று இருந்ததை கண்டனர். அது ஹெராயின் போதைப்பொருள் என்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.53 கோடி ஆகும். போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியை கைது செய்தனர். மேலும் கைதான பயணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story