நான் தஹி ஹண்டியை உடைத்து விட்டேன்- முதல்-மந்திரி ஷிண்டே பேச்சு


நான் தஹி ஹண்டியை உடைத்து விட்டேன்- முதல்-மந்திரி ஷிண்டே பேச்சு
x

1½ மாதத்துக்கு முன்பே நான் தஹி ஹண்டியை உடைத்து விட்டேன் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசினார்.

தானே,

1½ மாதத்துக்கு முன்பே நான் தஹி ஹண்டியை உடைத்து விட்டேன் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசினார்.

தஹி ஹண்டி திருவிழா

தானே டெம்பி நாக்காவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சார்பில் பிரமாண்டமான தஹி ஹண்டி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷரத்தா கபூர் கலந்து கொண்டு கோவிந்தாக்களை உற்சாகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் கோவிந்தாக்கள் மற்றும் திரண்டு இருந்த கூட்டத்தினர் மத்தியில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:-

உடைத்து விட்டேன்

நீங்கள்( (கோவிந்தாக்கள்) தற்போது தஹி ஹண்டியை உடைக்கிறீர்கள். 1½ மாதத்துக்கு முன்பே நான் தஹி ஹண்டியை உடைத்து விட்டனே். 50 அடுக்கு (50 எம்.எல்.ஏ.க்கள்) பிரமிடு அமைத்து தஹி ஹண்டியை (உத்தவ் தாக்கரே ஆட்சி) உடைத்தேன். ஆனால் அது மிகவும் கடினமானதாக இருந்தது. இருப்பினும் வெற்றி பெற்றோம்.

என்னுடன் பிரமிடு அமைக்க மேலும் பலர் (எம்.எல்.ஏ.க்கள்) வருவதாக தான் கூறினார்கள். நான் தான் வேண்டாம் என கூறிவிட்டேன். எனவே எனது பிரமிடின் உயரம் அதிகரித்து கொண்டே தான் இருக்குமே தவிர குறையாது.

விருப்பம் நிறைவேறியது

சிவசேனா கட்சி தொண்டர் முதல்-மந்திரியாக வர வேண்டும் என்பது பால்தாக்கரேயின் விருப்பம். தானேயை சேர்ந்த சிவசேனா தொண்டர் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்பது ஆனந்த் திகேயின் விருப்பம். ஆனந்த் திகேயின் விருப்பம் தற்போது நிறைவேறி இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story