நவிமும்பையில் பள்ளி பஸ்சில் தீப்பிடித்ததால் பரபரப்பு- மாணவர்கள் உயிர் தப்பினர்


நவிமும்பையில் பள்ளி பஸ்சில் தீப்பிடித்ததால் பரபரப்பு- மாணவர்கள் உயிர் தப்பினர்
x

நவிமும்பையில் பள்ளி பஸ்சில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மும்பை,

நவிமும்பையில் பள்ளி பஸ்சில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பள்ளி பஸ்சில் தீ

நவிமும்பை கார்கர் செக்டார்-15 பகுதியில் நேற்று காலை 11.30 மணியளவில் பன்வெல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 4 மாணவர்கள், ஒரு ஊழியர் மற்றும் டிரைவர் இருந்தனர். இந்தநிலையில் திடீரென பஸ்சில் இருந்து புகை வந்தது. உடனடியாக பஸ்சை நிறுத்திய டிரைவர், ஊழியர் உதவியுடன் அனைத்து மாணவர்களையும் கீழே இறக்கினார்.

இந்தநிலையில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் அதில் இருந்து கரும்புகை வெளியேறியது.

மாணவர்கள் தப்பினர்

தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் பஸ்சில் எரிந்த தீயை 15 நிமிடங்களில் அணைத்தனர். விபத்தில் பஸ் எரிந்து நாசமானது. எனினும் மாணவர்கள் உரிய நேரத்தில் கீழே இறக்கப்பட்டதால் அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் நேற்று நவிமும்பை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story