தென்மும்பை கட்டுமான அதிபர் கைது

மும்பை,
சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவினர் ஸ்டேட் வங்கியிடம் ரூ.280 கோடி ேமாசடியில் ஈடுபட்டதாக கடந்த 2016-ம் ஆண்டு கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் விஜய் குப்தா, அஜய் குப்தா, ஸ்டேட் வங்கி ஊழியர் வி.என். கதம் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். விசாரணையில் மோசடியில் தென்மும்பையை சேர்ந்த கட்டுமான அதிபர் ஹரிஷ் மேத்தாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஹரிஷ் மேத்தாவை சி.பி.ஐ. கைது செய்தது. விசாரணைக்கு பிறகு சி.பி.ஐ. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. கோர்ட்டு கட்டுமான அதிபரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





