பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

பிவண்டியில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தானே,
பிவண்டியில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பயங்கர தீ
தானே மாவட்டம் பிவண்டி ஆஷ்பிபி ரோட்டில் உள்ள சாய்பாபா காம்பவுன்டில் பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இந்த குடோனில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவத் தொடங்கியது.
இதன் காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமானது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் 3 வாகனங்களில் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
போலீஸ் விசாரணை
விபத்து நடந்த போது குடோனில் ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் குடோனில் எரிந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






