நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொலை செய்த வியாபாரி போலீசில் சரண்


நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொலை செய்த வியாபாரி போலீசில் சரண்
x

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த பழைய பொருட்கள் வியாபாரி போலீசில் சரண் அடைந்தார்.

மாவட்ட செய்திகள்

தானே,

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த பழைய பொருட்கள் வியாபாரி போலீசில் சரண் அடைந்தார்.

நடத்தையில் சந்தேகம்

தானே மாவட்டம் பிவண்டி கேல்கர் கிராமம் ராஜ்லஷ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்டாக்(வயது35). பழைய பொருட்கள் வியாபாரியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். இந்தநிலையில் முகமது முஸ்டாக்கின் மனைவி அடிக்கடி வீட்டில் இருந்து வெளியே சென்று பக்கத்து வீட்டு வாலிபருடன் பேசி வந்ததை கண்டார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் கொண்டார்.

கடந்த 18-ந்தேதி இரவு முகமது முஸ்டாக் மனைவி, குழந்தைகளுடன் படுத்து உறங்கினார்.

நள்ளிரவில் கண்விழித்த அவர் அருகே படுத்து இருந்த மனைவி காணாமல் போய் இருந்ததை கண்டார். இதன்பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்று பார்த்த போது அவரது மனைவி பக்கத்து வீட்டு வாலிபருடன் இருந்ததை கண்டு கடும் ஆத்திரமடைந்தார்.

மனைவி கொலை

இது பற்றி எதுவும் பேசமால் வீட்டிற்கு வந்தார். வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த மனைவியிடம் இது குறித்து வாக்குவாதம் செய்தார். இதில், ஆத்திரமடைந்த அவர் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிசென்றார். காலையில் குழந்தைகள் எழுந்து பார்த்த போது அசைவின்றி கிடந்த தாயை கண்டு அழுதனர்.

சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது முகமது முஸ்டாக்கின் மனைவி உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் தப்பி சென்ற முகமது முஸ்டாக் போலீசில் சரண் அடைந்து நடந்த விவரத்தை தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



1 More update

Next Story