சாலையில் திடீர் பள்ளத்தால் 25 கடைகளில் சுவர் விரிசல்


சாலையில் திடீர் பள்ளத்தால் 25 கடைகளில் சுவர் விரிசல்
x
தினத்தந்தி 23 Sep 2022 5:00 AM GMT (Updated: 23 Sep 2022 5:01 AM GMT)

கல்வா வகோபா நகர் பகுதியில் சாலையில் திடீர் பள்ளத்தால் 25 கடைகளில் சுவர் விரிசல்

தானே,

கல்வா வகோபா நகர் பகுதியில் பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லாமல் இருக்க அதன் அருகே தடுப்பு சுவர் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி சுவர் அமைப்பதற்காக அடித்தளம் அமைக்க குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. நேற்று அப்பகுதியில் குழி தோண்டும் போது சாலையில் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டது.

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினால் அருகே இருந்த 25 கடைகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த மாநகராட்சியினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என அதிகாரி தெரிவித்து உள்ளனர். பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லாமல் இருக்க அதன் அருகே தடுப்பு சுவர் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி சுவர் அமைப்பதற்காக அடித்தளம் அமைக்க குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. நேற்று அப்பகுதியில் குழி தோண்டும் போது சாலையில் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டது.

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினால் அருகே இருந்த 25 கடைகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த மாநகராட்சியினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என அதிகாரி தெரிவித்து உள்ளனர்.


Next Story