சஞ்சய் ரதோட்டுக்கு மந்திரி பதவி வழங்கியது ஏன்?- ஏக்நாத் ஷிண்டே விளக்கம்


சஞ்சய் ரதோட்டுக்கு மந்திரி பதவி வழங்கியது ஏன்?- ஏக்நாத் ஷிண்டே விளக்கம்
x

பெண் தற்கொலை வழக்கில் சிக்கிய சஞ்சய் ரதோட்டுக்கு மந்திரி பதவி வழங்கியது ஏன்? என்பதற்கு ஏக்நாத் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை,

பெண் தற்கொலை வழக்கில் சிக்கிய சஞ்சய் ரதோட்டுக்கு மந்திரி பதவி வழங்கியது ஏன்? என்பதற்கு ஏக்நாத் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.

சர்ச்சை மந்திரி

ஷிண்டே தரப்பில் மந்திரி பதவி ஏற்ற சஞ்சய் ரதோட், உத்தவ் தாக்கரே ஆட்சியின்போது இளம்பெண் தற்கொலை வழக்கு சர்ச்சையில் சிக்கி மந்திரி பதவியை இழந்தவர். அவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டதற்கு ஆளும் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மாநில பா.ஜனதா துணை தலைவர் சித்ரா வாக் கண்டனம் தெரிவித்ததோடு, சஞ்சய் ரதோடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவேன் எனவும் அறிவித்து உள்ளார்.

ஆனால் உத்தவ் தாக்கரே ஆட்சியின் போதே சஞ்சய் ரதோட் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதால் அவருக்கு பதவி வழங்கப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நியாயப்படுத்தி உள்ளார்.

முதலில் ஆதரவு தெரிவித்தவருக்கு பதவி

இதேபோல ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி அணியை உருவாக்கியபோது முதலில் ஆதரவு தெரிவித்த தானாஜி சவாந்துக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது. தானாஜி சாவந்த் 2014 - 2019 வரையிலான பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ஆவார். ஆனால் கடந்த முறை அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர் உஸ்மனாபாத்தில் கட்சி கூட்டங்களை புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பணக்கார எம்.எல்.ஏ.வாக கருத்தப்படும் இவர் 2019-ம் தேர்தலின் போது வேட்பு மனுவில் தனக்கு ரூ.206 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். தானாஜி சாவந்த்திற்கு மாநிலம் முழுவதும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் உள்ளன.

----------


Next Story