குடிபோதையில் மகள்களை தாக்கிய பெண் கைது

தானே,
தானே மாவட்டத்தை சேர்ந்த நகை வடிமைப்பாளர் ஒருவரின் 33 வயது மனைவிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவர்களுக்கு 12 மற்றும் 6 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.
இந்தநிலையில் பெண் எப்போதும் குடித்துவிட்டு வந்து தனது மகள்ளை அடித்து வந்ததாக தெரிகிறது. அதேபோல சம்பவத்தன்று பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அந்த பெண்ணின் கணவருக்கு போன் செய்து, உங்கள் மனைவி தாக்கியதில் சிறுமிகள் இருவருக்கும் கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் வலியால் துடிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்து காயம் அடைந்த மகள்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அப்போது மகள்கள், தங்களை அடிக்கும் வீடியோவை அவரிடம் காட்டினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதில், கடந்த 8 ஆண்டுகளாக தனது மனைவி மதுவுக்கு அடிமை ஆகிவிட்டதாகவும், குடிபோதையில் மகள்களை அடிப்பதாகவும் கூறினார்.
இந்த புகாரின் போரில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் பெண் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






