2 வயது குழந்தையை கடத்திய பெண் கைது


2 வயது குழந்தையை கடத்திய பெண் கைது
x

பன்வெல் ரெயில் நிலையம் அருகே 2 வயது குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் அவர் பிடிபட்டு உள்ளார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

பன்வெல் ரெயில் நிலையம் அருகே 2 வயது குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் அவர் பிடிபட்டு உள்ளார்.

குழந்தை கடத்தல்

ராய்காட் மாவட்டம் பன்வெல் ரெயில் நிலையம் அருகே நடைபாதையில் வாலிபர் ஒருவர் 4 குழந்தைகள், மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 15-ந்தேதி காலை 6 மணி அளவில் கண் விழித்து பார்த்த போது அவரது 2 வயது மகள் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். இது பற்றி அவர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த இடத்தில் பதிவான செல்போன் நம்பர்கள் மூலம் விசாரணை நடத்தினர்.

பெண் கைது

இதில் பன்வெல் தாலுகா கட்கரிபாடா பகுதியை சேர்ந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த பெண் தான் குழந்தையை கடத்தியதும் தெரியவந்தது. சேவாந்தி கட்காரி என்று அடையாளம் காணப்பட்ட அந்த பெண்ணின் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் குழந்தையை கடத்தி சென்ற பெண் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story