புதுச்சேரியில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; நேற்று 103 பேருக்கு தொற்று உறுதி


புதுச்சேரியில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; நேற்று 103 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 15 July 2021 7:27 PM GMT (Updated: 15 July 2021 7:27 PM GMT)

புதுச்சேரியில் தற்போது 1,327 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 121 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் நேற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதில் புதுச்சேரியில் 81 பேர், காரைக்காலில் 14 பேர், மாஹேவில் 7 பேர், ஏனாமில் 1 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,19,405 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் புதுச்சேரியில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,773 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 122 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,325 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 1,307 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story