பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை


பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 20 April 2022 5:06 PM GMT (Updated: 20 April 2022 5:06 PM GMT)

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமி பலாத்காரம்
ஊட்டியை சேர்ந்தவர் இமான்ராஜ் (வயது 21). பெயிண்டர். இவரது உறவினர் புதுவை ரெட்டியார்பாளையம் ஜெ.ஜெ.நகரில் வசித்து வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு வேலைக்காக இமாம்ராஜ்       புதுச்சேரி வந்தார். அப்போது அவருக்கும், 10-ம் வகுப்பு படித்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 
இந்த நிலையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை, இமான்ராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். அவர்கள் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இமான்ராஜை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
இது தொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.  குற்றம்சாட்டப்பட்ட இமானுராஜிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தர விட்டார்.

Next Story