வானவில் : மைதானத்துக்கு வெளியே விராட் கோலியின் மற்றொரு இன்னிங்ஸ்


வானவில் : மைதானத்துக்கு வெளியே விராட் கோலியின் மற்றொரு இன்னிங்ஸ்
x
தினத்தந்தி 26 Sep 2018 10:41 AM GMT (Updated: 26 Sep 2018 10:41 AM GMT)

கிரிக்கெட் உலகில் இளம் கதாநாயகன், இந்திய அணியின் கேப்டன் என பலப்பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

மைதானத்துக்கு உள்ளே இவரது விளாசல் மைதானத்துக்கு வெளியே பலரையும் இவரது ரசிகராக்கியுள்ளது.

மைதானத்துக்கு வெளியேயும் இவரது இன்னிங்ஸ் பல்வேறு ரூபங்களில் தொடர்கிறது. இம்முறை ஹீரோ மோட்டோ கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிளுக்காக..

சமீபத்தில் கோவையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது. இந்த மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்த இந்நிறுவனம் தனது தயாரிப்புகளின் விளம்பர தூதராக (பிராண்ட் அம்பாசிடராக) விராட் கோலியை நியமிப்பதாக அறிவித்துள்ளது.

எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிளை ஓட்டி மக்களின் மனதைக் கவரும் விராட், தனது விளம்பர தூதர் பயணத்தைத் தொடங்குகிறார்.

இந்த புதிய மாடல் மோட்டார் சைக்கிளின் விற்பனையக விலை ரூ. 89,900 ஆகும்.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் புதிய தலைமுறைக்கேற்ற, புதிய மேம்பட்ட தொழில்நுட்பத்தோடு, சிறப்பான வடிவமைப்பில் அனைவரையும் கவரும் வகையிலான வாகனங்களைத் தயாரிக்கிறது.

இந்நிறுவனத் தயாரிப்புகளின் நம்பகத் தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் நிறுவனத்தின் விளம்பர தூதரும் இருக்க வேண்டும் என்று கருதிய நிறுவனம், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலியை விளம்பர தூதராக நியமித்துள்ளது. இளைஞர்களின் பிரதிநிதியாகத் திகழும் விராட் கோலி, தனது நிறுவனத்தின் புதிய தயாரிப்பான எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார் சைக்கிளுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும் என்று நிறுவனம் முடிவு செய்துள்ளது. “பயம் அறியாதது” (Fears Nothing) என்ற வாசகத்துக்கு ஏற்ற தேர்வாகவும் விராட் கோலி விளங்குவார்.

மைதானத்தில் விளாசித் தள்ளும் விராட், மைதானத்துக்கு வெளியே எக்ஸ்ட்ரீம் மோட்டார் சைக்கிளிலும் கலக்குவார், இவரது வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என ஹீரோ மோட்டோகார்ப் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பவன் முன்ஜால் வாழ்த்தியுள்ளார்.

“ இந்தியாவிலிருந்து சர்வதேச அளவில் பிரபலமான பிராண்டாக ஹீரோ மோட்டோகார்ப் திகழ்கிறது. லட்சக்கணக்கான இளம் வயதினர், பெண்கள் எனது தலைமுறையைச் சேர்ந்த அனைவருமே ஹீரோ மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை நிச்சயம் ஓட்டியிருப்பார்கள்.அந்த வகையில் இந்நிறுவனத்துடன் இணைவது ஒரு தனித்துவ அடையாளமாக கருதுகிறேன்”, என்று விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். நிர்வாக இயக்குநர் பவன் ஜியை வெகு காலமாகவே எனக்குத் தெரியும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விளம்பர தூதர் பணியை அளித்ததற்கு அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளதாக விராட் குறிப்பிட்டார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் மிகப் பெரிய தொழில் குழுமங்களில் ஹீரோ மோட்டோ கார்ப் முக்கியமான நிறுவனமாகும். பல்வேறு விளையாட்டு வீரர்களை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஹீரோ குடும்பத்துடன் இணைவதை தான் பெரும் அதிர்ஷ்டமாக கருதுவதாக விராட் குறிப்பிட்டுள்ளார். இந்த மோட்டார் சைக்கிளில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதை எதிர்நோக்கி காத்திருப்பதாக விராட் கோலி தெரிவித்தார்.

இனி நேரம் கிடைக்கும்போதெல்லாம் விராட் கோலி எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிளில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சுற்றுவார் என்று எதிர்பார்க்கலாம். 

Next Story