கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிக்கும் முயற்சி தீவிரம்


கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிக்கும் முயற்சி தீவிரம்
x
தினத்தந்தி 13 Oct 2018 11:10 AM GMT (Updated: 13 Oct 2018 11:10 AM GMT)

கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களை பெருமளவில் பாதித்து உயிரைப் பறிக்கிறது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10-ல் 9 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நோய் ‘எச்.பி.வி.’ என்ற வைரசால் ஏற்படுகிறது. இத்தகைய வைரஸ் 100 விதமாக உள்ளன. இந்த வைரஸ் தாக்கிய பெண்களுக்கு தொடக்கத்தில் நோயின் பாதிப்பு தெரியாது. அதற்கான அறிகுறிகள் தென்படாது. பின்னர்தான் தெரியவந்து, உயிரைப் பறிக்கும் நிலை ஏற்படும்.

ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இது சர்வதேச அளவில் பாதி ஆகும். எனவே இந்த நோயை ஒழிக்க அங்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு கடந்த 2007-ம் ஆண்டு முதல், கர்ப்பப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் ‘எச்.பி.வி.’ வைரசை கட்டுப்படுத்தும் தடுப்புஊசி மருந்து பெண் குழந்தைகளுக்குப் போடப்பட்டு வருகிறது. தற்போது அது சிறுவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த 1991-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டாலும் 2007-ம் ஆண்டுதான் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டது.

‘எச்.பி.வி.’ வைரஸ் தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதால் ஆஸ்திரேலியாவில் தற்போது பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் தாக்குதல் மிகவும் குறைந்துவிட்டது. தற்போது அங்கு ஒரு லட்சம் பெண்களில் 6 பேரை மட்டுமே கர்ப்பப்பை புற்றுநோய் தாக்குகிறது. எனவே வருகிற 2022-ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் இந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த முன்மாதிரியை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும்! 

Next Story