குப்பையிலிருந்து கோடி...


குப்பையிலிருந்து கோடி...
x

மறுசுழற்சி இன்று பெரும் வணிகமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

மலையாகக் குவியும் குப்பை மேட்டிலிருந்து, மக்காத குப்பைகளை பிரித்து மறுசுழற்சி செய்வது பணம் குவிக்கும் தொழிலாக மாறி உள்ளது. ‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது மறுசுழற்சி தொழிலுக்குத்தான் பொருந்தும்.

காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம், துணி, எலக்ட்ரானிக் சாதனைங்கள் போன்றவை மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. இவற்றில் பிளாஸ்டிக்கை மட்டும் மறுசுழற்சி செய்வது மாசு விளைவிப்பதாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. பிளாஸ்டிக்கானது மறுசுழற்சி செய்யாவிட்டாலும் சுற்றுச்சூழலுக்கு தீமையைத் தருகிறது. அதே வேளையில், கண்ணாடியை மறுசுழற்சி செய்வதால் அது காற்றிலிருந்து அதிகப்படியான கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சிக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கண்ணாடி, பீங்கான் பொருட்களை நாம் அதிகம் பயன்படுத்துவது நமக்கும் நல்லது, சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

இப்படி கழிவுகளை வாங்கி மறுசுழற்சி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதித்து எளிதில் கோடிகளை குவிக்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை. மகத்துவம் நிறைந்த மறுசுழற்சித் துறை, இனி வரும் காலங்களில் இன்றும் மிகப்பெரும் துறையாக வளரும் என்பதில் வியப்பேதும் இல்லை.

Next Story