செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வங்கி பங்குகள் விலை நிலவரம்
மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பல வங்கிகளின் பங்கு விலை அதிகரித்தது.
மும்பை
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பல வங்கிகளின் பங்கு விலை அதிகரித்தது. அந்த துறைக்கான குறியீட்டு எண் 0.26 சதவீதம் ஏற்றம் கண்டது. வர்த்தகத்தின் இறுதியில் அந்த பங்குகளின் விலை நிலவரம் வருமாறு:-
* இண்டஸ் இந்த் வங்கிப் பங்கு விலை 1.95 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.1,776.45-க்கு கைமாறியது.
* பாரத ஸ்டேட் வங்கிப் பங்கின் விலை 1.78 சதவீதம் முன்னேறி ரூ.328.55-ல் நிலைகொண்டது.
* யெஸ் வங்கிப் பங்கு விலை 1.70 சதவீதம் அதிகரித்து ரூ.280.40-ல் நிலைபெற்றது.
* ஆக்சிஸ் வங்கிப் பங்கின் விலை 0.31 சதவீதம் உயர்ந்து ரூ.767.45-ல் முடிவுற்றது.
* பேங்க் ஆப் பரோடா பங்கின் விலை 0.30 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.133.25-ஆக இருந்தது.
* கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்கு 0.04 சதவீதம் முன்னேறி ரூ.1,338.80-க்கு விலைபோனது.
அந்த நிலையில் சரிவைச் சந்தித்த வங்கிப் பங்குகள் வருமாறு:-
* சிட்டி யூனியன் பேங்க் பங்கின் விலை 1.91 சதவீதம் சரிவடைந்து ரூ.202.40-ஆக இருந்தது.
* எச்.டீ.எப்.சி. வங்கி பங்கின் விலை 0.59 சதவீதம் குறைந்து ரூ.2,296.50-ல் முடிவுற்றது.
* ஐசிஐசிஐ வங்கிப் பங்கு விலை 0.33 சதவீதம் இறங்கி ரூ.397.45-ல் நிலைபெற்றது.
* பெடரல் வங்கிப் பங்கு 0.31 சதவீதம் முன்னேறி ரூ.97.65-க்கு விலைபோனது.
Related Tags :
Next Story