கனடாவில் புகலிடம் கோருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு


கனடாவில் புகலிடம் கோருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 May 2019 11:05 AM GMT (Updated: 25 May 2019 11:05 AM GMT)

அகதிகளுக்கு அதிக ஆதரவு தரும் நாடுகளில் ஒன்றாகத் திகழும் கனடாவுக்கு புகலிடம் தேடி வருவோர் எண்ணிக்கை கூடியுள்ளது.

கனடா நாட்டு புள்ளி விவரத் துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர் களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

கணக்கெடுப்பின்படி, 2015-ம் ஆண்டு 16 ஆயிரம் பேரும், 2016-ல் 50 ஆயிரம் பேரும், 2018-ல் 55 ஆயிரம் பேரும் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு விண்ணப்பித்த 50 ஆயிரம் பேரில், 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 27 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களின் முடிவு நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதி பதியாகப்பொறுப்பேற்ற டிரம்ப், ஆரம்பம் முதலே அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாகவே கனடாவில் புகலிடம் கோரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Next Story