பங்குச்சந்தை துளிகள்


பங்குச்சந்தை துளிகள்
x
தினத்தந்தி 9 July 2019 8:06 AM GMT (Updated: 9 July 2019 8:06 AM GMT)

* சோபா நிறுவன ப் பங்குகளை வாங்கலாம் என ஈடல்வைஸ் நிறுவனம் அறிவுறுத்துகிறது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.619-ஆக நிர்ணயித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.549.15-ல் நிலைகொண்டது. கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 1.59 சதவீத சரிவாகும்.

* அசோக் லேலண்டு நிறுவனப் பங்கை விற்றுவிடலாம் என ஆனந்த ரதி நிறுவனம் கூறுகிறது. மேலும், இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை (ரூ.57-ல் இருந்து) ரூ.55-ஆக குறைத்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.85.45-ஆக இருந்தது. கடந்த வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.78 சதவீத இறக்கமாகும்.

* என்.டி.பி.சி. நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என ஐ.ஐ.எப்.எல். நிறுவனம் தொடர்ந்து பரிந்துரை செய்கிறது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.158-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில் திங்கள்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.129.65-ல் நிலைபெற்றது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 4.98 சதவீத குறைவாகும்.

* மாரிகோ நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கூறுகிறது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.435-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், நேற்று இப்பங்கின் விலை ரூ.371-ல் நிலைபெற்றது. சென்ற வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 2.21 சதவீத சரிவாகும்.

* ஐ.டி.சி. நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என ஐ.டீ.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.330-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் திங்கள்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.277.30-ஆக இருந்தது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.77 சதவீத இறக்கமாகும்.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.


Next Story