தினம் ஒரு தகவல் : மனிதனின் முதல் வடு


தினம் ஒரு தகவல்  : மனிதனின் முதல் வடு
x
தினத்தந்தி 16 July 2019 9:47 AM GMT (Updated: 16 July 2019 9:47 AM GMT)

நமது உடலின் ஒவ்வொரு பாகமும் பல விதமான செயல்பாட்டை கொண்டவை. ஒவ்வொரு பாகத்திலும் எண்ணற்ற செல்களின் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சிறு கருவாக நாம் உருவானது மிக சாதாரண செயல் கிடையாது. இது இயற்கையின் அற்புத நிகழ்வாகத்தான் மருத்துவர்களால் எண்ணப்படுகிறது.

அந்த வகையில் ஒரு சிசுவையும், தாயையும் இணைக்கும் பந்தமாக இருப்பது தொப்புள் கொடிதான். குழந்தையாக பிறந்த பிறகு இதனை நீக்கி விடுவர். ஆனால், அந்த வடுவை நாம் அழிக்க முடியாது. ஏனெனில் அதுதான் தொப்புள் என்ற ஒன்றாக நம்முடனே இறுதி காலம் வரை வரும்.

நம் உடலில் எண்ணற்ற வடுக்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவை அனைத்தும் நாம் விழும் போதோ, விளையாடும் போதோ ஏற்பட்டவை. ஆனால், நம் உடலில் இயற்கையாகவே ஏற்பட்ட முதல் தழும்பு இந்த தொப்புள்தான். தாயையும், குழந்தையையும் குறிக்கும் ஒரு அளவுகோலாக கூட இதனை கருதலாம். தொப்புளில் பல வகையான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. கிட்டத்தட்ட 2,400 வகையான பாக்டீரியாக்கள் தொப்புளில் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இவை நம் உடலில் உள்ள சில பாகங்களை போன்றே சுத்தம் செய்யாமல் இருப்பதால் ஏற்படுகின்றதாம்.

பொதுவாக, தொப்புள் பல விதமாக வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தொப்புள் இருக்குமாம். அதில் ஒரு வகைதான் வெளிபுறமாக தொப்புள் இருப்பது. இது 10 சதவிகித மக்களுக்கே இருக்குமாம். இவை கவர்ச்சி குறைந்த தொப்புள்களாக எண்ணப்படுகிறது.

இன்றைய மருத்துவத்தில் பலவித முறைகளை நாம் பின்பற்றினாலும், பண்டைய கால மருத்துவம் எப்போதும் சிறப்பு பெற்றதாக தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றுதான் “ஸ்டெம் செல்“ முறை என்பதை நவீன மருத்துவம் பயன்படுத்துகிறது. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த முறையை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். தொப்புள் கொடியை தாயத்தில் கட்டி வைத்து அதனை உயிருக்கு ஆபத்தான நிலைகளில் உபயோகித்தனர்.

தொப்புளின் வடிவம் ஒவ்வொருவருக்கும் பல வகைகளில் மாற்றம் பெறும். அந்த வகையில் இவை வெளி தொப்புள், உள் தொப்புள் என இரு வகையாக பிரிக்கின்றனர். ஆனால், ஜி வடிவ தொப்புள் சரியான தொப்புள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பொதுவாக உடலில் அழுக்குகள் அதிகம் சேரத்தான் செய்யும். அந்த வகையில் தொப்புளில் சேர்ந்துள்ள அழுக்குகள் சற்றே அதிகமானவை.

இவை பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே அதிகம் இருக்குமாம். ஏனெனில் ஆண்களின் உடலில் அதிகப்படியான முடிகள் இருப்பதால் தொப்புளில் அழுக்குகள் அதிகம் இருக்கிறது.

மேலும் இது துணிகளில் இருந்தும் சேருமாம். பொதுவாக தொப்புள்களை பெரும்பாலான மக்கள் விரும்ப செய்வார்கள். அவற்றின் அழகை ரசிக்கவும் செய்வார்கள். ஆனால், 1960-ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட படங்களில், பெண்களின் தொப்புள்கள் சென்சார் செய்யப்பட்டே படம் வெளியிடப்படுமாம். அந்த அளவிற்கு இதனை வெளிக்காட்டப்படாத உறுப்பாக கருதினர்.


Next Story