பங்குச்சந்தை துளிகள்


பங்குச்சந்தை துளிகள்
x
தினத்தந்தி 30 July 2019 8:26 AM GMT (Updated: 30 July 2019 8:26 AM GMT)

* பயோகான் நிறுவனப் பங்கை விற்றுவிடலாம் என கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் அறிவுறுத்துகிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.247-ஆக நிர்ணயித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.237.05-ல் நிலைகொண்டது. கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.88 சதவீத சரிவாகும்.

* வி கார்டு இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.182-ஆக நிர்ணயித்து இருக்கிறது. நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.228.20-ல் நிலைகொண்டது. இது கடந்த வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 3.08 சதவீதம் குறைவாகும்.

* இந்திரபிரஸ்தா காஸ் நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என எச்.டீ.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கும் இந்நிறுவனம் ரூ.384-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.302.35-ஆக இருந்தது. சென்ற வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.13 சதவீத சரிவாகும்.

* அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனம் கூறு உள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.205-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், திங்கள்கிழமை வர்த்தகத்தில் இப்பங்கின் விலை 3.898 சதவீதம் இறங்கி ரூ.205.10-ஆக இருந்தது.

* ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என எச்.டீ.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.1,375-ஆக நிர்ணயித்துள்ளது. நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.963.15-ல் முடிவுற்றது. இது கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தை காட்டிலும் 1.36 சதவீத சரிவாகும்.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.


Next Story