உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் புதிய பங்கு வெளியீடு அமோக வெற்றி


உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் புதிய பங்கு வெளியீடு அமோக வெற்றி
x
தினத்தந்தி 7 Dec 2019 5:46 AM GMT (Updated: 7 Dec 2019 5:46 AM GMT)

பங்குகள் வேண்டி 166 மடங்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்த நிலையில் உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் புதிய பங்கு வெளியீடு அமோக வெற்றி பெற்று இருக்கிறது.

பங்கு வெளியீடு

சிறிய வங்கித் துறையைச் சேர்ந்த உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் தனது எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டும் வகையில் பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இவ்வெளியீடு கடந்த 2-ந் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி 4-ந் தேதி (புதன்கிழமை) நிறைவடைந்தது.

உஜ்ஜிவான் பேங்க் வெளியீட்டில் ரூ.750 கோடி மதிப்பிற்கு பங்குகள் வெளியிடப்பட்டது. அதில் ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.36-37-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தகுதி வாய்ந்த பங்குதாரர்களுக்கு ரூ.75 கோடி வரையிலான மதிப்பிற்கு பங்குகள் ஒதுக்கப்பட்டது.

மொத்தம் 12.39 கோடி பங்குகள் சந்தைக்கு வந்த நிலையில் இறுதி நாளான புதன்கிழமை அன்று இந்நிறுவனத்தின் 2,054 கோடி பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது. அது வெளியீட்டு அளவைக் காடடிலும் ஏறக்குறைய 166 மடங்கு அதிகமாகும். எனவே இந்த வெளியீடு மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

உஜ்ஜிவான் பேங்க் பங்கு வெளியீட்டை கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், ஐ.ஐ.எப்.எல். செக்யூரிட்டீஸ், ஜே.எம். பைனான்சியல் ஆகிய நிறுவனங்கள் நிர்வகித்தன. வெளியீடு நிறைவடைந்த நிலையில் விரைவில் இந்தப் புதிய பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

சிறிய வங்கித் துறை

சிறிய வங்கித் துறையில் ஏற்கனவே பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனம் ஏ.யூ. ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகும். முதலில் ஏ.யூ. பைனான்சியர்ஸ் என்ற பெயரில் வங்கியல்லா நிதி நிறுவனமாக செயல்பட்டு வந்த இதற்கு பாரத ரிசர்வ் வங்கி, கடந்த 2015-ஆம் ஆண்டில் சிறிய வங்கியாக செயல்பட உரிமம் வழங்கியது. 

Next Story